மாம்பழக் கண்ணத்தைச் செல்லம்மா-
உன் மாணிக்கப் பற்களால் கடியம்மா!
கொம்புப் பலாச்சுளைக் கண்ணம்மா-
உன் கொவ்வை இதழ்களால் சுவையம்மா!
நாவற் பழங்களைக் கண்ணம்மா -
உன் நாவால் சுவைத்திட தேனம்மா!
ஆவல் கொய்யாக் கனியம்மா -
உன் அழகிய வாயிற்கு அமுதம்மா!
திராட்சைப் பழங்கள் தொங்குதம்மா-நீ
தேடியே உண்டிட ஏங்குதம்மா!
ஆரஞ்சுப் பழத்தைக் கண்ணம்மா-உன்
அழகிய நாவால் சுவையம்மா!
ஆப்பிள் அருமை சாத்துக்குடி- உன்
அழகிய வாய்வர காக்குதடி! தோப்பில் விளைந்திடும் சப்போட்டா-உன்
தோளுக்கு உரம்தரும் சாப்பிட்டா!
வாழைப் பழமே கண்ணம்மா-உன்
வாய்ச்சுவை கண்டே வாழுமம்மா!
வாழ வழிசெய்யும் கனிகளை -நீ
வாங்கி உண்ணுவாய் முத்தம்மா!