articles

வாங்கி உண்பாய் கோவி.பால.முருகு

மாம்பழக் கண்ணத்தைச் செல்லம்மா-

உன் மாணிக்கப் பற்களால் கடியம்மா!

கொம்புப் பலாச்சுளைக் கண்ணம்மா-

உன்     கொவ்வை இதழ்களால் சுவையம்மா!  

நாவற்  பழங்களைக்  கண்ணம்மா -

உன்      நாவால் சுவைத்திட தேனம்மா!  

ஆவல்   கொய்யாக் கனியம்மா -

உன்      அழகிய  வாயிற்கு அமுதம்மா!  

 திராட்சைப் பழங்கள் தொங்குதம்மா-நீ  

    தேடியே உண்டிட ஏங்குதம்மா!

ஆரஞ்சுப் பழத்தைக் கண்ணம்மா-உன்      

அழகிய நாவால்  சுவையம்மா!  

ஆப்பிள்  அருமை  சாத்துக்குடி- உன்  

   அழகிய வாய்வர காக்குதடி! தோப்பில் விளைந்திடும் சப்போட்டா-உன்

      தோளுக்கு உரம்தரும் சாப்பிட்டா!  

வாழைப் பழமே கண்ணம்மா-உன்    

  வாய்ச்சுவை கண்டே வாழுமம்மா!

வாழ வழிசெய்யும் கனிகளை -நீ      

   வாங்கி உண்ணுவாய் முத்தம்மா!